Pages

Wednesday, March 2, 2011

निशि दिन बरसत नयन हमारे

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை பிறங்கிற்று உலகு.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடமேது.

இவ்வுலகிற்கு வந்த வரிசைப்படியே எவரும் திரும்புவதில்லை.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சாவு செய்தித் தாள்களில் இடம் பெறுகிறது. அத்தகைய இளைஞர்களின் பெற்றோர்களில் ஒருவனாக இருக்க மாட்டேன் என்று கோருவதற்கு நான் என்ன கடவுளுக்குச் செல்லப் பிள்ளையா?

தவிர்க்க முடியாத சாவைப் பற்றி வருந்துவதால் பயன் என்ன.?

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வாரார்.

சென்ற பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ, அடுத்த பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ?

அவன் திரும்பி வாரான் என்ற உண்மையை நேருக்கு நேராகச் சந்தித்து விடு. ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் துயரம்.

மேலே கண்ட உண்மைகளை எல்லாம் நான் புரிந்து கொண்டுவிட்டேன்.

ஆனால் இவற்றை எனக்குப் படித்துச் சொன்ன கண்கள் புரிந்து கொள்ள மறுக்கி்ன்றனவே!

இரவும் பகலும் பொழியுதே, எமது கண்கள், என் செய்ய?